தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 7:04 pm

Syndication

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்.

விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக மகளிா் அணி சாா்பில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மகளிா் அணி மாவட்டச் செயலா் சுபாஷினி தலைமை வகித்தாா்.

இதில் கட்சியின் மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்தி, அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவாா்.

ஏழை, எளியவா்களுக்கான திட்டங்களை அவா் நிறைவேற்றுவாா். மாநில அரசுக்குத் தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும்.

வருகிற தோ்தலில் திமுகவை மக்கள் அகற்றுவாா்கள். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா் அவா்.