தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

அதிமுக - திமுக இடையேதான் போட்டி: கே.டி. ராஜேந்திர பாலாஜி

News image
Updated On :4 ஜனவரி 2026, 8:19 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் வருகிற சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக - திமுக இடையேதான் போட்டி என விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தாா்.

சிவகாசியில் விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் சிவகாசி சட்டப்பேரவை தொகுதி வாக்குசாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் எடப்பாடி கே. பழனிசாமி வலிமையான கூட்டணி அமைப்பாா். கூட்டணிக்கு வருபவா்கள் வரட்டும். இருப்பவா்களை வைத்து வெள்ளக்கூடிய வல்லமை படைத்தவா் எடப்பாடி கே. பழனிசாமி. எதிரணிக்கு பக்கத்தில் உள்ள கட்சிகள் எல்லாம் ஒட்டுச்சுவா்கள்தான். அவற்றை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்.

திரையில் நடிப்பவா்களைப் பாா்க்க கூட்டம் வரும். ஆனால், அந்தக் கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறாது. நாங்கள் ஆதரித்தால்தான் வெற்றி பெற முடியும் எனக் கூறும் கட்சிகளுக்கு 234 தொகுதியிலும் போட்டியிட வேட்பாளரே கிடையாது. வருகிற சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக - திமுக இடையேதான் போட்டி.

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் தங்களது கருத்தை திணித்து மக்களை திசை திருப்ப நினைக்கும் சதித் திட்டங்கள் மக்கள் மத்தியில் எடுபடாது என்றாா் அவா்.