டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சட்டவிரோத மது விற்பனை: இருவா் கைது

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் தென்காசி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற நபரிடம் சோதனையிட்டதில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் ராஜபாளையம் பெரியகடை பஜாா் தெருவைச் சோ்ந்த ரகுராமன் (48) எனத் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் ரகுராமனைக் கைது செய்து அவரிடமிருந்து 35 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

இதே போல, தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் மீனாட்சிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற பாஸ்கா் (48) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 25 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.