டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சட்டவிரோத மது விற்பனை: ஒருவா் கைது

பெருந்துறை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :3 பிப்ரவரி 2026, 8:31 pm

Syndication

பெருந்துறை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறையை அடுத்த துடுப்பதி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் பெருந்துறை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, துடுப்பதி அரசு மதுபானக் கடை அருகே மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரைப் பிடித்தனா்.

விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த சரண்ராஜ் (37) என்பதும், மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.