தென்னிந்தியா முழுவதும் சாக்தம் அல்லது சக்தி வழிபாட்டில் காணப்படும் ஒரு வழிபாட்டு முறையே ‘அரிகண்டம்’, ‘தலைபலி’, ‘நவகண்ட பலி’, ‘தூக்குதலை பலி’ என்பர். தன் தலையை தானே ஈவது, தன் உடலை தானே ஒன்பது துண்டங்களாக அறிந்து படைப்பது, தன் தலையை அறுக்கும்பொழுது கீழே விழாது இருக்க தன் தலையை பிடித்துகொண்டு மரக்கிளை, மூங்கில் போன்றவற்றில் கட்டிவிட்டு அறுப்பது என்பன முறையே இவற்றின் பொருளாகும். அரிகண்டம் தலைப்பலி ஆகலாம். ‘சாவாரப்பலி’யை இதனை ஒத்ததாகக் குறிப்பிடப்படுவது உண்டு. ஆனால், இதன் நோக்கமும், செயலும் வேறு என்பதால் இங்கு கவனத்தில் கொள்ளப்படவில்லை.