இவ்விடம், சங்க காலக் குறுநில மன்னன் வாழ்ந்த பகுதியாகவும், வணிக வளம் நிரம்பிய பகுதியாகவும் விளங்கியதை, சங்க கால இலக்கியங்கள் மற்றும் இப்பகுதியின் கல்வெட்டுகள் தெரிவிக்கும் செய்திகளைக் கொண்டு உறுதி செய்துகொள்ள முடிகிறது. இச்செய்திகளை ஒப்புநோக்கும்போது, பெருங் கற்காலத்துக்கு அடுத்து, வரலாற்றுக் காலத்தின் துவக்க காலமாக பொ.ஆ. முதலாம் நூற்றாண்டு முதல் ஒரு சிறப்பான, நாகரிகமான, தொழிற்கூடங்கள் நிறைந்த பகுதியாகவும், வணிக மையமாகவும் இப்பகுதி திகழ்ந்து, பின்னர் வரலாற்றுக் காலம் வரை தொடர்ந்து மக்கள் வாழ்ந்து வந்துள்ளதை இவ்வகழ்வாய்வு தெளிவுபடுத்துகின்றது.