காவிரிப்பூம்பட்டினத்தில், அரசன் வாழ்விடம், அந்தணர் இருப்பிடம், மருத்துவர், ஜோதிடர் எனப் பல பிரிவினருடன், நாட்டியக் கலைஞர்களும் வாழ்ந்த இடங்கள் இருந்ததை அறியமுடிகிறது. மேலும், சிறப்புமிக்க கடற்கரை துறைமுகப்பட்டினமாக விளங்கிய நகரம் என்பதால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நல்ல நிலையில் இங்கு நடைபெற்று வந்துள்ளது. அதாவது, பல்வேறு நாடுகளிலிருந்து கப்பல்கள் இங்கு இறக்குமதிப் பொருட்களுடன் வரும். அதேபோல, இங்கிருந்து கப்பல்கள் மூலமாகப் பல பொருட்கள் ஏற்றுமதியும் செய்யப்படும். ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்கவை சந்தனம், அகில், முத்து, மிளகு, அரிய கல்மணிகள் போன்றவை ஆகும்*1.