காஞ்சியும், தஞ்சையும், மதுரையும் தமிழகத்தில் என்றும் சிறப்புபெற்ற பகுதிகளாகவும், நகரங்களாகவும் இருந்துள்ளன. பேரரசர்கள் ஆட்சிபுரிந்த பகுதிகளை அகழாய்வு மேற்கொண்டால், அவர்களின் அரண்மனை, மக்கள் வாழ்க்கைமுறை, பண்பாடு இவற்றை முற்றிலுமாக உணரலாம் என்ற நோக்கில், சில இடங்களில் மட்டும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவை, தஞ்சாவூர், குறும்பன்மேடு, பழையாறை, கங்கைகொண்ட சோழபுரம், கண்ணனூர், படைவீடு, பல்லவமேடு, மாளிகைமேடு, சேந்தமங்கலம் போன்றவற்றை குறிப்பிடலாம். அகழாய்வுகளில் காணப்பட்ட கட்டடப் பகுதிகள், தொல்பொருட்கள், விவசாயம் பெற்றிருந்த முக்கியத்துவம், நீர்ப்பாசன வசதி, குடிநீர் வசதி போன்றவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை தொல்லியல் அகழாய்வுகளுக்குப்பின் காணலாம்.