வி.டி. கிருஷ்ணசாமியும் அவரது குழுவினரும் மேற்கொண்ட இவ்வகழ்வாய்வில், பெருங் கற்படைச் சின்னங்களான கல்லறை, கல்வட்டம், கற்குவை போன்றவற்றை அகழ்ந்தெடுக்கப்பட்டன. மூன்று வகையான பெருங் கற்காலச் சின்னங்களும் வெளிக்கொணரப்பட்டன. கால்களைக் கொண்ட ஈமப்பேழையும், மைய ஈமப்பேழையைச் சுற்றி மேலும் மூன்று ஈமப்பேழைகளும் இருந்ததை அகழாய்வில் வெளிப்படுத்தினர். ஈமப்பேழையில் துவாரங்கள் இருப்பதையும் காணமுடிந்தது. இங்கு இரும்புப் பொருட்களும், மட்கலன்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. தொல்பொருட்களாகக் கிடைத்தவற்றுள் தட்டு, தாங்கி, மூன்று கால்களைக் கொண்ட ஜாடி, தாழி, இரும்புக் கோடாரி, ஈட்டி முனைகள், கத்தி, ஆணி மற்றும் குதிரை லாடம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை*2.