வரலாற்றுக் காலம் - 4. கொற்கையும் ஆதிச்சநல்லூரும்
ஆதிச்சநல்லூரில் பல இன மக்கள் வாழ்ந்துள்ளதும், அவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து ஒற்றுமையோடு வாணிகம் புரிந்து நல்லதோர் வாழ்க்கையை வாழ்ந்துள்ளதையும் தெளிவாக அறியமுடிகிறது. எனவே, ஆதிச்சநல்லூர் அகழாய்வு தமிழக வரலாற்றில் மிகவும் சிறப்பான இடத்தைப் பெறுவது மட்டுமின்றி, தமிழக மக்களின் வாழ்க்கை முறை, பொருளாதார வளர்ச்சி, பண்பாடு இவற்றை எடுத்தியம்புவதற்கான சான்றாகவும் திகழ்கிறது.























