தென் தமிழகத்தில் குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டம்[30], புதுக்கோட்டை மாவட்டம் (கல்வட்டம், கற்பதுக்கை, முதுமக்கள் தாழி) திருமயம் போன்ற இடங்களில் மேற்கொண்ட ஆய்வில், நுண் கற்காலப் பண்பாட்டினைத் தொடர்ந்து இரும்புக் காலப் பண்பாட்டுச் சான்றுகளையே அதிகளவில் காணமுடிகிறது.[31] புதுக்கோட்டை பகுதியில் மட்டும், அதிக அளவில் கல்திட்டைகள் காணப்படுகின்றன. குறிப்பாக சித்தன்னவாசல், சூரணிப்பாடி, சூரந்தப்பட்டி, தச்சன்பட்டி, தொடையூர், முத்துக்காடு, கலியப்பட்டி, களக்குடிப்பட்டி போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். இப்பகுதியில் உள்ள கல்திட்டைகள், மைய அரசால் அகழாய்வு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.