டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்


பாடல் 7

வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு,
வெள் வளை, மேகலை கழன்று வீழ,
தூமலர்க் கண் இணை முத்தம் சோர
துணை முலை பயந்து என தோள்கள் வாட
மாமணிவண்ணா, உன் செங்கமல
வண்ண மெல் மலர் அடி நோவ, நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலைப்பெயில் எவன்கொல் ஆங்கே.

சிறந்த மணியைப்போன்ற வண்ணம் கொண்ட பெருமானே, உன்னுடைய சிவந்த தாமரையைப்போன்ற அழகிய, மென்மையான மலர்த் திருவடிகள் நோகும்படி நீ சென்று பசுக்களை மகிழ்ச்சியோடு மேய்க்கிறாய், உன்னைப் பிரிந்து எங்களுடைய உயிர் நெருப்பிலே இட்ட மெழுகுபோல் உருகி வேகிறது, வெண்மையான வளையல்கள், மேகலை கழன்று விழுகின்றன, தூய்மையான மலர்களைப் போன்ற இரு கண்களிலும் கண்ணீர் முத்துகள் சொட்டுகின்றன, இரு மார்பகங்களிலும் பசலை படர்கிறது, தோள்கள் வாடுகின்றன. எம்பெருமானே, நீ பசு மேய்க்கச் செல்லும்போது அசுரர்கள் அங்கே வந்து உன்னோடு போரிட்டால் என்ன ஆகுமோ! (இதை எண்ணியும் நாங்கள் வருந்துகிறோம்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.