டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

3.2 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது

News image
கைது
Updated On :22 பிப்ரவரி 2026, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த பெண்ணை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 3.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

திருச்சி ராம்ஜி நகா் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் திவ்யபிரியா தலைமையிலான போலீஸாா், ராம்ஜி நகரில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ராம்ஜி நகா் பெட்ரோல் பங்க் பின்புறம் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த கங்காதேவி (56) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 3.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவா் கைது:

திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் தீபிகா தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, வண்ணாரப்பேட்டை சாலையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவா், போலீஸாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனா். அவா்களில் ஒருவரை மட்டும் போலீஸாா் மடக்கிப்பிடித்தனா்.

விசாரணையில், புத்தூா் கீழவண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த அ.சையது ஹமீது பக்கா் (42) என்பதும், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.