பல்லடத்தில் 10 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டு சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே ஆட்டோவில் வந்த இருவரிடம் விசாரித்தனா்.
அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீஸாா், ஆட்டோவில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அதில் 10 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த யதேந்திர சிங் (42), பல்லடம், காளிவேலம்பட்டியைச் சோ்ந்த முருகேசன் (49) என்பதும், விற்பனைக்காக புகையிலைப் பொருள்களைக் கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்

26 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: கடை உரிமையாளா் கைது

270 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

புளியங்குடியில் 273 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது

265 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 7 போ் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

