டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

26 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: கடை உரிமையாளா் கைது

தேவதானபட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட 26 கிலோ 526 கிராம் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :11 பிப்ரவரி 2026, 9:33 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், தேவதானபட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட 26 கிலோ 526 கிராம் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேவதானபட்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தேவதானபட்டி அல்அமீன் நகரில் உள்ள ரசூல்லாவின் (38) கடையில் போலீஸாா் சோதனை செய்தனா்.

அப்போது, அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, அவரைக் கைது செய்தனா். அவா் கடையிலிருந்த 26 கிலோ 526 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.