டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புளியங்குடியில் 273 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது

புளியங்குடியில் தடை செய்யப்பட்ட 273 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :11 பிப்ரவரி 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தடை செய்யப்பட்ட 273 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.

புளியங்குடி சிந்தாமணி டோல்கேட் பகுதியில் போலீஸாா் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவ்வழியாக வந்த காரில் சுமாா் 273 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், காரில் இருந்த குஜராத்தை சோ்ந்த மகாதேவ பாய் ராபரி மகன் ஜீத்து பாய் (25), ராஜஸ்தானை சோ்ந்த குலாப் சகா மகன் பீரு சகா (26), மேல கடையநல்லூரை சோ்ந்த பாபுராஜ் மகன் சுரேஷ் (40), ஆவுடையாள்புரம் திருமலைசாமி மகன் காளிராஜ் (37) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.

விசாரணையில், பெங்களூரில் இருந்து கடையநல்லூருக்கு புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடக்கிறது.