டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்


பாடல் 5

பணிமொழி நினைதொறும் ஆவி வேம்ஆல்,
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா,
பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ,
பெரு மத மாலையும் வந்தின்றாலோ,
மணிமிகு மார்வினில் முல்லைப் போது என்
வன முலை கமழ்வித்து, உன் வாய் அமுதம் தந்து,
அணிமிகு தாமரைக் கையை அந்தோ,
அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய்.

பகல்முழுவதும் பசுக்கூட்டங்களை மேய்க்கச் சென்ற கண்ணா, உன்னுடைய பணிவான பேச்சுகளை எண்ணும்போதெல்லாம் என் உயிர் வேகிறது, பெரிய செருக்கோடு மாலைப்பொழுது வருகிறது, கட்டவிழ்ந்த மல்லிகை மலர்களை வாடைக்காற்று தூவுகிறது,  பெருமானே,  உன்னுடைய ரத்தினம் அணிந்த மார்பிலே இருந்த முல்லை மலர் என்னுடைய அழகிய மார்பகங்களை நறுமணம் கமழச்செய்யட்டும், உன்னுடைய வாய் அமுதத்தை அடியவர்களாகிய எங்களுக்குத் தருவாய், அழகிய தாமரைபோன்ற திருக்கரத்தை எங்கள் தலையிலே அணிவிப்பாய். அடடா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.