டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்


பாடல் 4

தொழுத்தையோம் தனிமையும், துணை பிரிந்தார்
துயரமும் நினைகிலை, கோவிந்தா, நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி,
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி,
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்
பாவியேன் மனம் அகம்தோறும் உள்புக்கு
அழுத்த, நின் செங்கனி வாயின் கள்வப்
பணிமொழி நினைதொறும் ஆவி வேம்ஆல்.

கோவிந்தா, அடிமைகளாகிய எங்களுடைய தனிமையையும், துணையைப் பிரிந்து வாடுகிற எங்களுடைய துயரத்தையும் நீ நினைப்பதில்லை, தொழுவத்திலுள்ள உன்னுடைய பசுக்களைதான் விரும்புகிறாய், எங்களை விட்டுவிட்டு அவற்றை மேய்க்கச் செல்கிறாய், பழுத்த நல்ல அமுதத்தின் இனிய சாறு வெள்ளமாகப் பாய்ந்து வருவதுபோல உன்னுடைய பேச்சு, அது பாவியாகிய என்னுடைய உள்ளத்தில் நுழைந்து ஒவ்வோர் இடத்திலும் அழுத்துகிறது, உன்னுடைய செங்கனிபோன்ற திருவாயிலிருந்து வரும் கள்வத்தனமான சொற்களை நினைக்கும்போதெல்லாம் என் உயிர் வேகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.