டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்

பாடல் 2

தகவு இலை, தகவு இலையே நீ, கண்ணா,
தட முலை புணர்தொறும், புணர்ச்சிக்கு ஆராச்
சுக வெள்ளம் விசும்பு இறந்து, அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து, அது கனவு என நீங்கி, ஆங்கே
அக உயிர் அகம் அகம்தோறும் உள்புக்கு,
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ,
மிக மிக இனி உன்னைப் பிரிவை ஆமால்,
வீவ, நின் பசுநிரை மேய்க்கப் போக்கே.

கண்ணா, நீ செய்வது நியாயமில்லை, நியாயமில்லை. என்னுடைய பெரிய மார்பகங்களை அணைத்துக் கலக்கிறாய், அந்தக் கலவியின் தீராத சுக வெள்ளம் வானைக் கடந்து அறிவை மூழ்கடித்துச் சூழும்போது, அது கனவு என்பதுபோல் நீ நீங்கிச் செல்கிறாய். உயிரின் உள்ளே உள்ளே புகுந்து தாங்கமுடியாத ஆசை பெருகுகிறது, அடடா, இப்படி உன்னை நான் மிகுதியாகப் பிரிந்து வாடும்படி நீ பசுக்கூட்டங்களை மேய்க்கச் செல்கிறாய். இனி அப்படிச் செல்லாதே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.