டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்


பாடல் - 7

துடைத்த கோவிந்தனாரே உலகு, உயிர், தேவும் மற்றும்
படைத்த எம் பரம மூர்த்தி, பாம்பு அணைப் பள்ளிகொண்டான்,
மடைத்தலை வாளை பாயும் வயல் அணி அனந்தபுரம்
கடைத்தலை சீய்க்கப்பெற்றால், கடுவினை களையலாமே.

யுகத்தின் முடிவிலே அனைத்தையும் அழித்த கோவிந்தனார்தான் இந்த உலகையும் உயிர்களையும் தேவர்களையும் பிறவற்றையும் படைத்த எங்கள் பரம மூர்த்தி, ஆதிசேஷனாகிய பாம்பில் பள்ளிகொண்ட பெருமானும் அவரே, அத்தகைய பெருமான் எழுந்தருளியிருக்கும் திருத்தலம், நீர் மடைகளிலே வாளை மீன்கள் பாய்கின்ற வயல்களைக்கொண்ட அழகிய திருவனந்தபுரத்திற்குச் சென்று அவருடைய ஆலயத்தின் வாசலை அடைந்து, அந்தப் புனிதமான வாயிலைச் சுத்தம் செய்து சேவை புரிந்தால், கொடிய வினைகளையெல்லாம் களைந்துவிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.