2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

செ.குளோரியான்

பாடல் - 7

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்,
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்,
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்,
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்,
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்,
உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ?
உற்றீர்கட்கு என்சொல்லிச் சொல்லுகேன் யான்?
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றனவே.

(தாய் சொல்கிறார்) என் மகள், ‘எனக்கு உறவினர்கள் யாரும் இல்லை’ என்கிறாள், ‘இங்கே எல்லாரும் என் உறவினர்கள்’ என்கிறாள், ‘உறவினர்களை உண்டாக்குவது நானே’ என்கிறாள், ‘உறவினர்களை அழிப்பதும் நானே’ என்கிறாள், ‘உறவினர்களுடன் பொருந்தியவன் நானே’ என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், தனக்கு உறவினர் என யாரும் இல்லாத மாயனின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, பேதைப்பருவமுள்ள என்னுடைய மகள் உள்ளூரக் கண்டு சொல்கிறவற்றையெல்லாம், இங்கே வந்திருக்கிற உங்களுக்கு நான் எப்படிச் சொல்வேன்?

******

பாடல் - 8

உரைக்கின்ற முக்கண்பிரான் யானே என்னும்,
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்,
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்,
உரைக்கின்ற அமரர்கோன் யானே என்னும்,
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்,
உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என்சொல்லுகேன்?
உரைக்கின்ற என் கோமள ஒண்கொடிக்கே.

(தாய் சொல்கிறார்) என் மகள், ‘தெய்வமாக உரைக்கப்படுகிற முக்கண்பிரான் (சிவபெருமான்) நானே’ என்கிறாள், ‘பிரம்மனும் நானே’ என்கிறாள், ‘அமரர்கள் அனைவரும் நானே’ என்கிறாள், ‘அமரர்களின் தலைவனான இந்திரன் நானே’ என்கிறாள், ‘முனிவர்களும் நானே’ என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், வேதங்களில் சிறப்பித்துச் சொல்லப்படுகிற முகில்வண்ணனின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, ‘இவளுக்கு என்ன ஆனது? சொல்வாய்’ என்று நீங்கள் கேட்கிறீர்கள், என்னுடைய அழகிய, ஒளி நிறைந்த கொடி போன்ற மகள் இப்படியெல்லாம் பேசுவதைப்பற்றி நான் எப்படிச் சொல்வேன்? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.