2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

செ.குளோரியான்

பாடல் - 5

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்,
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்,
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்,
திறம்காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும்,
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்,
திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என்சொல்லுகேன்?
திறம்பாது என் திருமகள் எய்தினவே.

(தாய் சொல்கிறார்) என் மகள், ‘நல்ல வழியிலிருந்து யாரும் மாறாதபடி நான் உலகைக் காக்கின்றேன்’ என்கிறாள், ‘தளர்ச்சியின்றி கோவர்த்தனகிரி என்கிற மலையை நான் எடுத்தேன்’ என்கிறாள், ‘அசுரர்களைத் தவறாமல் கொன்றேன்’ என்கிறாள், ‘திறனைக் காட்டி அன்று ஐந்து பாண்டவர்களைக் காத்தேன்’ என்கிறாள், ‘எந்த ஆபத்தும் இல்லாதபடி கடலைக் கடைந்தேன்’ என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், பக்தர்களுக்கு அருள்புரிவதில் என்றும் சலிப்படையாத கடல்வண்ணனின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, இவளைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற உறுதியுடன் இருக்கிற உலகத்து மக்களே, மீட்க இயலாதபடி என் திருமகள் அடைந்திருக்கிற இந்த நிலையை நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்?

******

பாடல் - 6

இன வேய்மலை ஏந்தினேன் யானே என்னும்,
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்,
இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும்,
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்,
இன ஆயர் தலைவனும் யானே என்னும்,
இனத்தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இன வேல்கண் நல்லீர்க்கு இவை என்சொல்லுகேன்?
இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே.

(தாய் சொல்கிறார்) என் மகள், ‘கூட்டமான மூங்கில்களையுடைய கோவர்த்தனகிரியைத் தூக்கியது நானே’ என்கிறாள், ‘கூட்டமான எருதுகளை (நப்பின்னைக்காக) அடக்கியதும் நானே’ என்கிறாள், ‘கூட்டமான பசுக்கன்றுகளை மேய்த்ததும் நானே’ என்கிறாள், ‘கூட்டமான பசுக்களைக் காத்ததும் நானே’ என்கிறாள், ‘கூட்டமான ஆயர்களின் தலைவனும் நானே’ என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், தேவர் கூட்டத்தின் தலைவனான திருமாலின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, வேல்களைப்போன்ற கண்களையுடைய நல்லவர்களே, வேல்களைப்போன்ற கண்களையுடைய என் மகள் அனுபவிக்கும் இந்த விஷயங்களைப்பற்றி நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.