2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

செ.குளோரியான்

பாடல் - 3

காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்,
காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்,
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்,
காண்கின்ற இக்காற்று எல்லாம் யானே என்னும்,
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்,
காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொல்லோ?
காண்கின்ற உலகத்தீர்க்கு என்சொல்லுகேன்?
காண்கின்ற என் காரிகை செய்கின்றவே.

(தாய் சொல்கிறார்) என் மகள், 'கண்ணில் தோன்றுகிற பூமி முழுவதும் நானே' என்கிறாள், அதேபோல், 'வானம் முழுவதும் நானே' என்கிறாள், 'கொடிய நெருப்பு முழுவதும் நானே' என்கிறாள், 'இந்தக் காற்று முழுவதும் நானே' என்கிறாள், 'கடல் முழுவதும் நானே' என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், காட்சிக்கு ஏற்ற கடல்போன்ற வண்ணத்தைக்கொண்டவனான திருமாலின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, இந்த உலகத்தைமட்டுமே காண்கிறவர்கள் நீங்கள், பெருமானின் காட்சியைக் காண்கின்ற என் மகள் செய்கிறவற்றை உங்களிடம் நான் எப்படிச் சொல்வேன்?

******

பாடல் - 4

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்,
செய்வான் நின்றனகளும் யானே என்னும்,
செய்து முன் இறந்தவும் யானே என்னும்,
செய்கைப்பயன் உண்பேனும் யானே என்னும்,
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்,
செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ?
செய்ய உலகத்தீர்க்கு இவை என்சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.

(தாய் சொல்கிறார்) என் மகள், 'செய்துகொண்டிருக்கிற வேலைகள் அனைத்தும் நானே' என்கிறாள், 'இனி செய்யவேண்டிய வேலைகளும் நானே' என்கிறாள், 'முன்பு செய்த வேலைகளும் நானே' என்கிறாள், 'அந்தச் செய்கைகளின் பலன்களை அனுபவிப்பதும் நானே' என்கிறாள், 'இந்தச் செயல்களைச் செய்கிறவர்களைப் படைப்பதும் நானே' என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், சிவந்த தாமரைபோன்ற கண்களைக்கொண்ட திருமாலின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது,  கபடம் அறியாத உலகத்து மக்களே, சிவந்த கனிபோன்ற வாயைக்கொண்ட என்னுடைய மகள், இந்த இளமானின் தன்மையை நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.