2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

செ.குளோரியான்

பாடல் - 1

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்,
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்,
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்,
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்,
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்,
கடல் ஞாலத்து ஈசன் வந்து ஏறக்கொலோ,
கடல் ஞாலத்தீர்க்கு இவை என்சொல்லுகேன்?
கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே.

(தாய் சொல்கிறார்) என் மகள், ‘கடலுடன் கூடிய இந்த உலகத்தைப் படைத்தது நானே’ என்கிறாள், ‘உலகமாக இருப்பதும் நானே’ என்கிறாள், ‘மகாபலியிடம் உலகத்தைப் பெற்றதும் நானே’ என்கிறாள், ‘பிரளயத்தின்போது இந்த உலகத்தை மேலே எடுத்துவந்து காப்பாற்றியதும் நானே’ என்கிறாள், ‘இந்த உலகத்தைக் காப்பதற்காக அதனை உண்டதும் நானே’ என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், கடலுடன் கூடிய இந்த உலகத்தின் தலைவன், திருமாலின் ஆவேசம்
இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, உலகத்து மக்களே, கடல் சூழ்ந்த இந்த உலகத்திலே இருக்கிற என் மகள் சொல்லும் இந்தச் சொற்களையெல்லாம் நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்?

******

பாடல் - 2

கற்கும் கல்விக்கும் எல்லை இலனே என்னும்,
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்,
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்,
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்,
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்,
கற்கும் கல்விநாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வியீர்க்கு இவை என்சொல்லுகேன்?
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.

(தாய் சொல்கிறார்) என் மகள், ‘கற்கும் கல்வியின் எல்லைக்குள் நான் இல்லை’ என்கிறாள், ‘கற்கும் கல்வியும் நானே’ என்கிறாள், ‘கற்கும் கல்வியை ஏற்படுத்துவதும் நானே’ என்கிறாள், ‘கற்கும்போது ஏற்படும் ஐயங்களைத் தீர்ப்பதும் யானே’ என்கிறாள், ‘கற்கும் கல்வியின் சாரமும் நானே’ என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், கற்கும் கல்விகள் அனைத்தின் தலைவன், எம்பெருமானின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, நீங்கள் (உலகத்தவர்கள்) இதுபற்றி இனிமேல்தான் கற்கவேண்டும், இந்நிலையில், இவற்றைக் கற்றுக்கொண்ட என் மகள் காண்கிறவற்றை நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.