நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

செ.குளோரியான்

பாடல் - 11

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு
                                                                        அருள்செய்யும்
மலியும் சுடர் ஒளி மூர்த்தி, மாயப்பிரான் கண்ணன்
                                                                        தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசு அறுக்கும்மே.


கலியுகத்தால் வருகிற துன்பங்களெல்லாம் தன்னுடைய அடியவர்களுக்கு இல்லாதபடி அருள்செய்கிற எம்பெருமான், சுடர் ஒளி நிறைந்த மூர்த்தி, மாயப்பிரான், கண்ணன், அவனுடைய புகழை, நிறைந்த வயல்கள் சூழ்ந்த, தென் திசையிலுள்ள திருக்குருகூர்க் காரிமாறன் சடகோபன் ஆயிரம் பாடல்களில் ஒலிச்சிறப்போடு பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாடினால், உள்ளத்தில் உள்ள குற்றங்கள் அறுந்துபோகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.