2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

செ.குளோரியான்

பாடல் - 7

அரி ஏறே, என் அம் பொன் சுடரே, செங்கண் கருமுகிலே,
எரி ஏய் பவளக்குன்றே, நால் தோள் எந்தாய், உனது அருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய், குடந்தைத்
                                                                                                         திருமாலே,
தரியேன் இனி, உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.

ஆண் சிங்கமே, என்னுடைய அழகிய பொன் சுடரே, செங்கண்களைக்கொண்ட கரிய மேகமே, நெருப்புப் பொருந்திய பவளக்குன்றே, நான்கு தோள்களையுடைய எங்கள் தந்தையே, உன்னுடைய அருள் என்றும் பிரியாதபடி என்னை அடிமையாக்கிக்கொண்டவனே, திருக்குடந்தையிலே கிடந்த திருக்கோலத்தில் அருள்புரிபவனே, இனியும் என்னால் (இந்த உலகத்துயரங்களைத்) தாங்க இயலாது, உன்னுடைய திருவடிகளைத் தந்து என்னுடைய பிறப்பை நீக்குவாய்.

******

பாடல் - 8

களைவாய் துன்பம், களையாது ஒழிவாய், களைகண்
                                                                                              மற்றுஇலேன்,
வளை வாய் நேமிப் படையாய், குடந்தைக் கிடந்தாய்,
                                                                                              மாமாயா,
தளரா உடலம் எனது ஆவி சரிந்துபோம்போது
இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.

வளைந்த வாயைக்கொண்ட சக்ராயுதத்தை ஏந்தியவனே, திருக்குடந்தையிலே கிடந்த திருக்கோலத்தில் அருள்புரிபவனே, பெரிய மாயச்செயல்களைச் செய்பவனே, நீ என்னுடைய துன்பங்களைக் களைந்தாலும் சரி, களையாவிட்டாலும் சரி, உன்னையன்றி எனக்கு இன்னோர் ஆதரவு இல்லை, என்னுடைய உடல் தளர்ந்து, உயிர் சரிகிறபோதும், நான் தளராமல் உன்னுடைய திருவடிகளை ஒன்றாகப் பிடித்துக்கொண்டிருக்கவேண்டும், அதற்கு நீ சம்மதிக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.