2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

செ.குளோரியான்

பாடல் - 5

அழுவன், தொழுவன், ஆடிக்காண்பன், பாடி அலற்றுவன்,
தழு வல்வினையால் பக்கம் நோக்கி நாணிக்
                                                                                       கவிழ்ந்திருப்பன்,
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய், செந்தாமரைக்
                                                                                       கண்ணா,
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.

பெருமானே, உன்னை எண்ணி நான் அழுவேன், உன்னைத் தொழுவேன், நடனமாடுவேன், பாடுவேன், அலற்றுவேன், என்னைத் தழுவுகின்ற வலிய வினைகளாலே நொந்து, நீ வரும் பக்கத்தை நோக்கி நாணத்தோடு தலைகவிழ்ந்து காத்திருப்பேன், செழிப்பான, ஒளி நிறைந்த வயல்களைக்கொண்ட திருக்குடந்தையிலே, கிடந்த திருக்கோலத்தில் அருள்புரிகிறவனே, செந்தாமரைக் கண்ணனே, தொழுகின்ற என்னை உன்னுடைய திருவடிகளில் சேர்க்கவேண்டும், அதற்கான வழியையும் நீயேதான் எனக்குச் சொல்லவேண்டும்.

******

பாடல் - 6

சூழ்கண்டாய் என் தொல்லைவினையை அறுத்து உன்
                                                                                                   அடிசேரும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழிதூர்த்து எனைநாள் அகன்று

                                                                                                   இருப்பன்,
வாழ் தொல்புகழார் குடந்தைக் கிடந்தாய், வானோர்
                                                                                                  கோமானே,
யாழின் இசையே, அமுதே, அறிவின் பயனே, அரி ஏறே.

தொன்மையான புகழை உடையவர்கள் வாழ்கிற திருக்குடந்தையிலே, கிடந்த திருக்கோலத்தில் அருள்புரிகிறவனே, வானோர் தலைவனே, யாழின் இசையே, அமுதே, அறிவின் பயனே, ஆண் சிங்கமே, என்னுடைய பழைய வினைகளை அறுத்து உன்னுடைய திருவடிகளைச் சேரும் முறையை அறிந்திருக்கிறேன், ஆனாலும், தூர்க்கமுடியாத (சுத்தம் செய்ய இயலாத) இந்திரியங்கள் என்கிற குழிகளைத் தூர்த்துக்கொண்டு இங்கேயே இருக்கிறேன், இப்படி இன்னும் எத்தனை நாள் நான் உன்னைப் பிரிந்திருப்பேன்? இதிலிருந்து நான் விடுபட ஒரு வழியைச் சொல்வாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.