2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

செ.குளோரியான்

பாடல் - 7

வந்தருளி என் நெஞ்சு இடம்கொண்ட வானவர்
                                                            கொழுந்தே, உலகுக்கு ஓர்
முந்தைத் தாய், தந்தையே, முழு ஏழ் உலகும் உண்டாய்,
செந்தொழிலவர் வேதவேள்வி அறாச் சிரீவர மங்கலநகர்
அந்தம்இல் புகழாய், அடியேனை அகற்றேலே.

எனக்காக வந்தருளி என்னுடைய நெஞ்சைத் தனக்கு இடமாகக் கொண்ட பெருமானே, வானவர்களின் கொழுந்தே, உலகுக்கு ஒப்பற்ற, பழைமையான தாய், தந்தையே, ஏழு உலகங்களையும் முழுமையாக உண்டவனே, சிறந்த பணிகளைச் செய்கிறவர்கள் வேத வேள்விகளை ஓய்வின்றிச் செய்துகொண்டிருக்கிற ஶ்ரீவரமங்கை (நாங்குநேரி) என்னும் திருத்தலத்திலே எழுந்தருளியிருப்பவனே, எல்லையில்லாத புகழைக்கொண்டவனே, என்னை உன்னிடமிருந்து அகற்றிவிடாதே.


******

பாடல் - 8

அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை
                                                                                  நன்கு அறிந்தனன்,
அகற்றி என்னையும் நீ அரும்சேற்றில் வீழ்த்திகண்டாய்,
பகல் கதிர் மணிமாடம் நீடு சிரீவர மங்கைவாணனே,
                                                                                 என்றும்
புகற்கு அரிய எந்தாய், புள்ளின் வாய் பிளந்தானே.

மிகுந்த ஒளிவீசும் மணிகள் பதிக்கப்பட்ட, உயர்ந்த மாடங்களைக்கொண்ட ஶ்ரீவரமங்கை (நாங்குநேரி) என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே, என்றைக்கும் சொல்லில் விளக்கமுடியாத சிறப்புகளைக்கொண்ட எங்கள் தந்தையே, பகாசுரன் என்கிற பறவையின் வாயைப் பிளந்தவனே, உன்மேல் அன்பற்றவர்களை அகற்றுவதற்காக நீ மாயமான, வலிமையான ஐந்து புலன்களைப் படைத்திருக்கிறாய், இதனை நான் நன்கு அறிவேன், இப்போது, உன்னிடமிருந்து என்னை அகற்றி, மீளமுடியாத அந்தச் சேற்றில் என்னை வீழ்த்திவிடுவாயோ என்று நான் அஞ்சுகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.