2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

செ.குளோரியான்

பாடல் - 5

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத்து
                                                            உள்ஆயுமாய் நின்று
கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே,
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச் சிரீவர
                                                           மங்கலநகர்
கைதொழ இருந்தாய், அது நானும் கண்டேனே.

எப்படிப்பட்ட பகைவர்களின் கூட்டங்களிலும் சென்று, அவர்களுக்கு எதிராக வஞ்சகம் புரிகின்ற பெருமானே, கருத்த திருமேனி கொண்ட அம்மானே, உன்னை அழைத்துக் கூவும் தகுதி எனக்கு உண்டா? வேள்விகளைப் புரிகிறவர்கள், பூலோகத்துத் தேவர்களான வைணவர்கள் நிறைந்திருக்கும் ஸ்ரீவரமங்கை (நாங்குநேரி) என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே, அனைவரும் கை
கூப்பித் தொழும்படி திகழ்பவனே, உன் பெருமையை நான் கண்டேனே.


******

பாடல் - 6

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே, கண்ணா, என்றும்
                                                                       என்னை ஆளுடை
வான நாயகனே, மணி மாணிக்கச் சுடரே,
தேன மாம்பொழில் தண் சிரீவர மங்கலத்தவர்
                                                                      கைதொழ உறை
வானமாமலையே, அடியேன் தொழ வந்தருளே.

வராக அவதாரமெடுத்து நிலத்தை எடுத்த என் அப்பனே, கண்ணா, என்றைக்கும் என்னை ஆளுகின்ற வான நாயகனே, அழகிய மாணிக்கச்சுடரே, தேன் நிரம்பிய மாமரச்சோலைகள் நிறைந்த, குளிர்ந்த, ஶ்ரீவரமங்கை (நாங்குநேரி) என்னும் திருத்தலத்திலே எழுந்தருளி, அங்குள்ள எல்லாரும் கை கூப்பித் தொழும்படி இருக்கும் வானமாமலையே, நான் தொழும்படி வந்தருள்வாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.