டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

செ.குளோரியான்

பிணக்குஅற அறுவகைச் சமயமும் நெறி உள்ளி உரைத்த
கணக்குஅறு நலத்தனன், அந்தம்இல் ஆதிஅம் பகவன்,
வணக்குஉடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு
உணக்குமின் பசைஅற அவன்உடை உணர்வுகொண்டு உணர்ந்தே.

ஆறுவகைச் சமயங்கள் உண்டு, அவற்றினிடையே பல மாறுபாடுகளும் உண்டு, ஆனால், அவை அனைத்தும் ஒருங்கே ஏற்றுக்கொள்கிற ஒருவன், எம்பெருமான்தான்.

அந்தச் சமயங்கள் அனைத்தும் நல்ல வழிகளை நினைத்துச் சொன்ன கணக்கில்லாத நன்மைகளைக்கொண்டவன் அவன், முடிவில்லாதவன், அனைத்துக்கும் தொடக்கமாகத் திகழும் அழகிய இறைவன், அவன் சொன்ன வணக்கத்தையுடைய தவநெறியில் நீங்கள் நில்லுங்கள், அவன் அருளிய அறிவைக்கொண்டு அவனை அறியுங்கள், மற்ற நெறிகள் அனைத்தையும் களைகளாக எண்ணிப் பறித்துவிடுங்கள், அவற்றிலிருக்கும் ஈரம் போகும்படி நன்றாக உலர்த்துங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.