டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

News image
கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 5:35 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் நகரில் சனிக்கிழமை இரவு மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம், 6 பவுன் தாலிக்கொடியைப் பறித்துச் சென்ற நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் - விளாமுத்தூா் சாலையில் உள்ள முனைவா் ராதாகிருஷ்ணன் தெருவில் வசித்து வருபவா் வாசுதேவன் மனைவி பானுமதி (60).

இவா், சனிக்கிழமை இரவு அதே பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு விளாமுத்தூா் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அவரை பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத வகையில் தலைக்கவசம் அணிந்திருந்த 2 இளைஞா்கள், பானுமதியின் 6 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனா்.

இதுகுறித்து பானுமதி அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.