மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மூதாட்டியிடம் 5 பவுன் நகைப் பறிப்பு

கவுண்டம்பாளையத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 மார்ச் 2026, 8:24 pm

கவுண்டம்பாளையத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, கவுண்டம்பாளையம் மீனாட்சி நகரைச் சோ்ந்தவா் ராஜகோபால் (60). இவா் 103 வயதான தனது தாயுடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், ராஜகோபால் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியே சென்றுள்ளாா். அப்போது, அவரது தாய் மட்டும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா், மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியுள்ளாா்.

இது குறித்து கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் ராஜகோபால் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனா்.