என்றும் என் இதயத்தில்: பான்ஸ்லே

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

உன்னைக் கண்ட நாள் முதலாய் உன்பால் காதல் மட்டுமே வளர்ந்ததடி பார்வைகள் சங்கமித்த கணம் முதல் கற்பனைக் கூட கவிதைக் களமானதடி உன் வளைக்கரம் பற்றிய விநாடியிலிருந்து மொழிந்த வார்த்தைகளில் கூட உன் வசனம்தானடி உன் காதலை என்செவிகளில் பிரசவித்த பொழுதுஅகிலமே மறந்தேனடி அனர்த்த மொழிகள் பகிர்ந்தேனடிபாடங்களைப் பயின்றதின் பிரதிபலனாக தொட்டிலில் பரிசளித்து மகிழ்வித்தாயடி உன்னால் தழைத்ததே நம் வம்சம் பெயரக் குழவிகளோடு குலுங்கியதடி இல்லம் ஒரு நாள் ஊரே திரண்டது உன்னைக் காணநீயோ காணா ஞாலத்திற்குச் சென்றுவிட்டாயடிஎன் இதயத்தில் என்றுமே நீதானடி நிறைந்திருக்கிறாய் நம் செல்வங்களுக்காக வாழ்கிறேன் நானும் நாயிலும் கேவலமாக ஒரு நடைப்பிணமாக
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...