நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

என்றும் என் இதயத்தில்: கவிரசிகன் கார்த்திகேயன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

ஓர் அன்னையின் பாச புலம்பல் இது...முகம் பார்க்கும் முன்னே,முதல் காதல் கொண்டேன் !!!வயிற்றினுள் உதைத்தாய்...வலியிலும் சுகம் கண்டேன்!!!கருவிலே உந்தன்,உருவம் உணர்ந்தேன்...உயிர் போகும் வலியைபிரசவத்திலே தந்தாய் !!!உதிரம் உதிர்த்து பாலூட்டி,நிலவை காட்டி சோறூட்டி,இசை பாடி தாலாட்டி -உன்பசி ஆற்றினேன் ஆனந்தமாய்!!!உன் ஆசைகள் எல்லாம்நிறைவேற்றிட வேண்டிஇரவும் பகலுமாய்ஓய்வின்றி உழைத்தேன்...பருவம் வந்ததும் நீஉருவம் மாறினாய்...இருந்தும் எனக்கு நீகுழந்தையாய் தோன்றினாய் !!!அறிவு பெற்ற பின் - நீஅயல்நாடு சென்றாய்...அங்கேயே உன்னவளைகண்டேன் என்றாய்...திருமணம் செய்த பின்பு,திரும்பி கூட பார்க்கலையே...விரும்பி நானும் வந்தாலும்நெருங்கி விட மறுக்கிறயே...தாயாக வைத்தவனே - எனைதனியாக வைத்துவிட்டாய் !!!நோயால் நொந்ததில்லை - உன்வாயால் நொந்து போனேன்...வலிகள் தெரியா வாழ்வை தந்தேன்...இருந்தும் என்னைமறந்தாய் கண்ணா !!!மனைவி ஒருத்திவந்தாள் என்று...கடவுளை தினமும்வேண்டிக் கொள்வேன்...நாளை....என் மகன், என்போல் இங்குவந்திட கூடதென்று...இன்று நான்முதியோர் இல்லத்தில்...என்றும் நீ என் இதயத்தில்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.