சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!
/

ஒற்றைச் சிறகோடு: அழகூர்.  அருண்.  ஞானசேகரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:21 pm

கவிதைமணி

ஒற்றைச்  சிறகுயென  உன்னதநல்  அன்னங்களும்
மற்றதைப்போல்  காணுமோ  மகிழ்வுதனை? --பெற்றிட்ட
இரண்டினிலே  ஒருசிறகை  இழந்திட்டப்  பறவையென
விரக்தியே; வாழ்வதுவே  வீண் !

ஒற்றைச்  சிறகுயென , உயர்வானில்  பறந்துமகிழ
உற்றநற்  பறவைகட்கு  உதவாதாம் ! -- பெற்றதனில்
குறைநேரக்  காண்பதெலாம்  கொடுமையே;  வாழ்வினிலே
சிறகொடிந்த  பறவைக்கேது  சீர் ?

சிறகொடிந்த  பறவையெனல்  சீரழிந்த  நிலையுணர்த்தும் ;
பிறவொன்றும்  உணர்த்தாதாம்  பெரிதுமாய் ; -- குறையுடன்
வாழ்வதினும்  கொடிதானது  வையகத்தில்  வேறில்லை,
தாழ்வுறக்  காண்பதனை  தவிர் !

சிறகொடிந்தப்  பறவையென  சீரில்லை , சிறப்பில்லை;
இரையென்றே  ஆகிடுமாம்  எளிதினிலே ! -- குறைநேரக்
கண்டுவிட  விதிமுடிந்தக்  கதையேதான் ;  அவைகட்கு
உண்டாமோ  வாழ்விந்த  உலகில் ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.