சிக்கிம் மாநிலத்தில், அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பது பதிவாகியுள்ளது.
சிக்கிமின் கியால்ஷிங் மாவட்டத்தில், வியாழக்கிழமை (பிப். 26) பிற்பகல் 11.24 மணியளவில் 10 கி.மீ. ஆழத்தில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய நிலஅதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மதியம் 12.17 மணியளவில் தலைநகர் கேங்டாகிலிருந்து 11 கி.மீ. வடமேற்கில் 10 கி.மீ. ஆழத்தில் 3.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நிலநடுக்கங்களிலும் பெரியளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் உள்ளூர்வாசிகள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
முன்னதாக, ஆழம் குறைந்த நிலநடுக்கங்கள் மிகவும் ஆபத்தானவை எனக் கருதப்படும் நிலையில், இன்று ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களால் பின்அதிர்வுகள் உருவாகக் கூடும் என அஞ்சப்படுவது குறிப்பிடத்தக்கது.
Summary
Two earthquakes have been reported in the state of Sikkim.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து பேரணி! 25,000 பெண்கள் பங்கேற்பு!

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

சிக்கிமில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!

சிக்கிமில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



