சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!
/

ஒற்றைச் சிறகோடு : கவிஞர் சுகா

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:21 pm

கவிதைமணி

இறைவன் படைத்த 
இரட்டைச் சிறகுகளோடு 
குறையொன்றும் இல்லாமல் 
சிறகடித்துப் பறந்தேன் 
மறைந்திருந்து எய்தானோ 
மாயவலை விரித்தானோ 
சிறையிட்டுக் கொள்ளத் துடித்தானோ 
விரைந்து வந்த வில்லம்புக்கு 
இறையாகிப் போனதே - என் 
ஒற்றைச் சிறகு!

நொடிப் பொழுது துடித்தபோதும் 
ஒடிந்துப் போனதென்னவோ 
ஒற்றைச் சிறகு தானே 
உறக்கச் சொன்னேன் - என் 
உள்ளம் பறந்தது வானில் 
இரக்கமற்ற வேடுவனை 
மறந்து பறக்கிறேன்
வியந்தும் பார்க்கிறேன் - என் 
ஒற்றைச் சிறகுக்குள்ளும் 
குவிந்து கிடக்கிறது 

காற்றை எதிர்கொள்ளும் 
போற்றற்கரிய பொக்கிஷமாய் 
மாற்றுச் சிந்தனையெனும்
மாமருந்து உள்ளதென்பதை
உணர்த்திய பொழுதுக்காய் 
உளமார உரைக்கின்றேன் 
நன்றியெனும் நற்சொல்லை 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.