நீர் வற்றிய குளம்: பேராசிரியர் கவிஞர் பு மகேந்திரன்


குளிர்ந்திட வேண்டும்
குளங்கள் பெருகிட
ஏரிகள் முடங்கின
ஏழை வாழ்வு சரிந்து போனது
தாகம் தாகம் தாகம்
தண்ணீர் கிடைக்குமா
விவசாயிகள் போராட்டம்
விளையுமா பயிர்
தண்ணீர் வருண்டது
தத்தளிக்கும் மக்கள்
அனல் பறக்கும் காற்று
அனைவருக்கும் வேண்டும் மழை
இறைவனை வேண்டி
இயற்கையைப் பாதுகாப்போம்
வறண்டு போயின கிராமங்கள்
வறுமை உருவாகியது இம்மண்ணில்
தாயே தரணியில்
தாகம் தீருமா
பச்சை பசுமைகள் வளர்ந்திட
பவள மணியாய் மழை பொழிந்திட
வருண பகவானை வணங்கிட வேண்டும்
வான் மழைப் பெருகிட வேண்டும்
மலை அருவி போல்
மண்ணில் பொழிந்திட வேண்டும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...