இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது : பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஆறோடும் நீரோடும்;ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

வறண்ட மேகத்தையும்
மழையாய் அழ வைக்கும்
மந்திர சக்தி மரம்
பச்சை மரத்தை வெட்டாதே
பட்டமரத்தை வெட்டலாம் நீ
அருகில் ஒரு செடி நட்டால்
இப்படி நீ செய்தால்
இடைவிடாது மழை பெய்யும்.

மரத்தால் பெய்த மழையை
ஒரு சொட்டும் வீணாக்காது
ஏரி குளம் குட்டையென
எல்லாவற்றிலும் நீ தேக்கு
தேக்கும் நீரில் ஒரு பாதி
நிலத்தடி நீராகி உயருமே நீர்மட்டம்
மறுபாதி ஆவியாகி பெய்யுமே மழையாக...

மரத்தால் ஒரு மழை
தேக்கும் நீரால் மறுமழை
இருமழையின் நீர் தேங்கி
பெய்யுமே மூன்றாம் மழை
மாதம் மும்மாரி பெய்தால்
ஆறோடும் வழியெங்கும்
நீரோடும் வெள்ளமாக
நம் மனம் துள்ளுமே மகிழ்ச்சியாலே...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.