இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது : பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஆறோடும் நீரோடும்: ௧விஞர் மா.உலகநாதன்,

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

அன்று.....
ஆறோடும் நீரோடும்,
ஊரோடும் தேரோடும்;
உழைத்துப் பிழைத்தனர்,
உவகையோடு வாழ்ந்தனர்;
உண்ணும் சோறும் பருகும்நீரும் அவர்தம்
வியர்வை  முத்துகள்;ஆனால்,
இன்று...
பிழைக்கவே உழைக்கிறார்கள்;
உதாரணத்திற்கு ஒன்று.
ஊறு செய்யும் நூறு நாள் வேலை;
ஆடவர் தோள் சுமந்த மண்வெட்டி,
பெண்டிர் கைகளுக்கு இடம் மாறியது;
அன்றாடம் கூடினர்,குழுமினர்;
ஆற அமர்ந்தனர்;
ஊர்க்கதைகளைப் பேசியே 
ஊதியம் பெற்று வாழ்கின்றார்!
உழைப்பு எனும் ஊற்றுக்கண்
திறந்தால்தான் வாழ்வெனும்
ஆற்றில் செழிப்பு எனும் நீரோடும்;
நம் தேர் ஓடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.