இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது : பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஆறோடும் நீரோடும்; ரா.பிரசன்னா

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

உறவாடும் ஒற்றைப் பறவையின் 
ஈரமான சிறகுகளில் இன்னும்
அடங்கவில்லை பரபரப்பு

அது கடந்து வந்த பாதையில்
சோலை ஒன்று பாலையாகி இருந்தது.
மணல் கொள்ளையர் போல் 
காகம் ஒன்று பள்ளத்தில் 
கல் வீசிக் கொண்டிருந்தது.

லாரிகளின் நீரோடையில் 
ஏனோ மர நிழல்கள் இல்லை
விழிப்பிற்கு முந்தைய 
நல் கனவாய் 
வந்து சேர்ந்த 
இந்த ஆறோடும்
இந்த நீரோடும்

விடிய விரும்பா  இரவாய் 
முங்கிக் குளிக்கும்
அந்த ஏகாந்தப் பறவையின்
சிறகுகள் வடிக்கும் நீரில்
முழுமை கொள்கிறது 
இந்தக் கவிதை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.