இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது : பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஆறோடும் நீரோடும்: பொன். குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

ஆறோடும் நீரோடும்
ஆனந்தமாக வாழ்ந்தவர்கள்
மக்கள்.

கிணறு வெட்டியும்
குளம் அமைத்தும்
குதித்து குளித்து
கொண்டாடியவர்கள்
மக்கள்.

ஆறுகளை
அழித்து விட்டார்கள்.
நதிகளை
நாசப்படுத்தி விட்டார்கள்.
கிணறுகளைக்
கொன்று விட்டார்கள்.
குளங்களைக் 
காணாமல் செய்து விட்டார்கள்.
மிச்சம் இருக்கும் நீரையும்
மாற்றானுக்கு விற்று விட்டது
அரசு.

இன்று
குளிக்கவும் நீரில்லை.
குடிக்கவும் வழியில்லை.
ஆறோடும் நீரோடும்
வாழ்ந்தவர்கள்
கண்ணீரோடும் வியர்வையோடும்
வாழ்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.