இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஆறோடும் நீரோடும்: சீர்காழி.ஆர் .சீதாராமன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

ஆறோடும் நீரோடும்
வாழ்ந்த அந்தக்கால
பெரியவர்கள் புனிதர்கள்,
தூய்மையை ஆற்றின்
புனிதத்தை மதித்தவர்கள்
வணங்கியவர்கள்

ஆறோடும் நீரோடும்
கானல் நீராய், மணல்
மட்டும் காணும்
இந்தத் தலைமுறை

ஆறோடும் நீரோடும்
சுவடுகூட தெரியாமல்
போகும் எதிர்கால
தலைமுறை

ஆறோடும் நீரோடும்
பொற்காலம் கடந்து,
பொறாதகாலம் காணும்,
கலிகாலம் காணப்போகும்  
நிலையே உண்மை

உணராத மனித
ஜீவன்கள் சுயநலம்
பாடி பிழைக்க எதிர்
காலம் தேடும் பணி
தான் ஆறோடும்
நீரோடும் கேள்விக்குறியாக

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.