இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஆறோடும் நீரோடும்; -வேம்பார் மு.க.இப்ராஹிம்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

ஆறோடும் நீரோடும் இடந்தான் 
நாகரிகத்திடன்  உறைவிடம்
அதுதான்
மனிதயினத்தின் பிறப்பிடம்..

உண்டான் உறங்கினான்
உயிர் வாழவும் கற்றுக்கொண்டான்
தாயைப் பழித்தாலும்
தண்ணீரைப் பழிக்க அஞ்சினான்..

கரை யில் மோதும் அலையைப் பார்த்து
கவலையை அதில் மறந்தான்..
கையில் நீரெடுத்து கன்னத்தில் அதைத் தெளித்து
காதலியுடன் களிப்புற்றான்..

ஆர்ப்பரித்து ஓடிய ஆறுகள்
அணைகளால் முட்டி முடங்கிப் போனது..
சிமெண்ட் கலவைகளில் சிக்கிப்போனது..

ஆறு இங்கே அரசியலாய் ஆனது
அள்ளிய மணலும் நீரும்
பணமாய் மாறியது..
நீருக்கான நிஜ யுத்தம்
மூளும் நாளும் தொலைவில் இல்லை..
இதை உணரும் நிலையில்
நாமும் இல்லை..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.