இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஆறோடும்  நீரோடும்; பாவலர் கருமலைத்தமிழாழன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

பண்பாடு  நாகரிகம்   பிறப்ப  தற்குப்
    பண்டையநாள்   பாய்ந்திட்ட   ஆறெல்   லாமே
தண்நிலவும்   கதிர்பொழியும்   ஒளியைப்   போலத்
    தரையிலின்றும்   வளம்தன்னைக்  கூட்டும்   போது
மண்மீதில்   முதல்பிறந்த   தமிழ   தத்தை
    மணக்கவைத்த   காவிரியை   வற்ற   வைத்தார்
கண்முன்னே   பாய்ந்தபோதும்    கன்ன  டத்தார்
    கால்வெட்டி    அணைகளுக்குள்   முடக்கி   வைத்தார் !

முப்போகம்   விளைந்திட்ட   தஞ்சை   மண்ணோ
    முளைவிடவும்   முடியாமல்   தவிக்கு   தின்று
எப்போதும்   நீர்பாய்ந்த   வயல்க   ளெல்லாம்
    எடுத்துரைக்கப்   பாலைவன   மான   தின்று
செப்புமாறு   உயர்ந்திருந்த   விவசா   யெல்லாம்
    செத்துசெத்து   விழுகின்றார்   வறுமை   யாலே
அப்பழுக்கே   இல்லாமல்   பாய்ந்த   பொன்னி
    ஆறோடும்   நீரோடும்   கனவா   யிற்று !

பழுதென்றே   தமிழகத்தைத்   தில்லி   யாட்சி
    பாராமல்  ஒதுக்குகின்ற   புறக்க   ணிப்பால்
பொழுதெல்லாம்   நீதிமன்றக்   கதவைத்   தட்டும்
    போராட்டம்   ஓயவில்லை   நீரும்   இல்லை
முழுதாகத்    தமிழகந்தான்   பாலை   யாகி
    முதுகுடிகள்    பட்டினியில்   சாவ   தற்குள்
உழுவதற்கும்   குடிப்பதற்கும்   உரிய   பங்கை
    உரிமையுடன்   பெறுவதற்கே   எழுவோம்   ஒன்றாய் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.