நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

நிழலைத்தேடி: மீனாள் தேவராஜன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

மாசிப்பனியும் போயிற்று
மரங்களில் துளிர்களும் வந்திடுச்சு
மன்மத வசந்தம் மலர்ந்திடுச்சு
தென்றல் காற்றும் வீசிடுச்சு
கோடை வெயில்  கொளுத்திடவே
நிழல்கள் குளுமை தந்திடவே
குயில்கள் மரங்களில் குந்திடும்
குருவிகள் கிளைகளில் கூச்சலிடும்
குரங்குகள் கிளைகளில் ஊஞ்சலாடும்
கூடிக் கும்மாளம் இடும்
மனிதர் மட்டும் விதிவிலக்கா
மரநிழல்களைத் தேடிப் படுப்பர்
வீடுகளில் விசிறிகள் இல்லை
வேண்டிய காற்று இல்லை
இயற்கை அன்னை எமக்களித்த
இலைகள் நிறைந்த மரமளிக்கும்
கோடைகால நிழலே சுகம்,சுகம்
ஓட்டைகள் நிறைநிழலே சுகம் சுகம்
மரங்கள் இயற்கை அளித்த வரங்கள்
மறந்தும் வெட்டாதீர் வேண்டுதல் விடுகிறேன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.