புதியடைரி : சௌம்யநாராயணன்


அற்பக்காகிதமே ,
எத்தனை நாள் என் கிறுக்கல்களை
சுமக்கப் போகிறாய் ?
என்னை தனியாய் தோல்வியில் விட்ட
சமுதாயத்தின் மீதுள்ள கோபத்தை உன்னிடம்
தான் காட்டுகிறேன்,
சக உயிரிடம் நான் படும் அவமானங்களை
உனக்கு பரிசாக அளிக்கிறேன்,
நீயோ மௌனத்தால் என்னை சந்தாப்படுத்துகிறாய் .
வீரியம் கொண்டெழும்
என் சொல் விந்துகளை நீ சுமந்து .
நினைவுக் குழந்தைகளை நிதம் பிரசவிக்கிறாய் ?
மலடியாக நீ இருந்திருக்கலாம்,
நான் திரும்பிப்பார்க்கையில்
வெறுமை இருந்திருக்கும்.
இல்லை இல்லை ,
என் ஏமாற்றமான வாழ்வின் ஒரே வெற்றி நீ தான் .
வருடம் முடியும் போது நீ உன்னையே புதுப்பித்து
புது மணப்பெண்ணாக
எனக்காக காத்திருக்கிறாயே.
வா நாளைய நம் புதுப் பக்கங்களாவது ,
என்னால் உனக்கும்
உன்னால் எனக்கும்
மகிழ்ச்சியாகட்டும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...