மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

புதிய டைரி  ! கவிஞர் இரா .இரவி ! 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

எழுதப் பழகுவோம் நாட்குறிப்பு 
எழுதினால் மறக்காது நினைவுகள் !

நல்லது கெட்டது இரண்டும் எழுதுங்கள் 
நாள் தோறும் மறக்காமல்  எழுதுங்கள் !

கடந்து வந்த பாதையை அசைபோடலாம் 
கடந்த காலத்தையும் காட்சிப்படுத்தும் !

மலரும் நினைவுகளை எந்நாளும் 
மலர்விக்கும் ஆற்றல் உண்டு அதற்கு !

எந்த நாளில் என்ன நடந்தது என்று 
எழுதிவந்தால் வருங்காலத்திற்கு உதவும் !

நடந்தவைகள் மட்டுமல்ல எதிர்காலத்தில் 
நடக்கவேண்டியதையும் பதிவு செய்யலாம் !

இலக்குகளையும் திட்டங்களையும் பதியலாம் 
இனிதே அடைந்தோமா சரிப் பார்க்கலாம் !

நாட்குறிப்பில் குறித்து வைத்ததைப்   படித்து 
நடந்தவைகளை தெளிவாக இயம்பலாம் !

எதுவுமே எழுதாமல் வைத்து இருந்துவிட்டு 
இல்லத்தரிசிக்கு கோலம்  போடத் தருபவர் உண்டு !

ஒரு வருடம் தவறாமல் எழுதி வந்தால் 
ஒவ்வொரு வருடமும் எழுதி வருவீர்கள் !

நல்லவர்கள் பயமின்றி எழுதலாம்  
கெட்டவர்கள் எழுதாமல் இருப்பது நன்று !

கையூட்டை எழுதி வைத்து பின் 
கையும் களவுமாக மாட்டிய வரலாறு உண்டு !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.