நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

வெற்றி முரசு " ரீகன். ஜெயக்குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

வையகத்தில்
தெளிந்தோடும் நீரோடையிலும் 
கலங்குதல் நடக்கலாம்..

நம்மை சுற்றியுள்ளோர்களின் நடத்தைகளும் 
கலங்குதலைச் செய்யலாம்

கலங்கியபின் தெளிவதும் 
நடந்திடும் காரியமே....

தெளிவான மனங்கள் கூட 
தாக்குதலாலும் , சாடுதலாலும் 
கலங்கிடும் நிலை காணலாம்...

பொறாமை உள்ளங்கள் 
அர்த்தமற்ற வார்த்தைகள் வீசி

அமைதியாம் மனதிலே 
கவலையெனும் கலங்குதலை 
வேண்டுமென்றே உருவாக்கலாம் ..

தைரியமற்ற நிலைதானும் 
மனங்களில் இருந்தால் 
கலங்குதலும் வேகமாகலாம் ..

தெளிவதும் மெதுவாகலாம்...

சமூகமொன்றின் கட்டமைப்பை 
கலைத்திட நினைப்போர் 
திட்டமிட்டே செயலொன்றை 
வன்செயலால் தொடங்கலாம்...

கலங்கி நின்றால் வென்றிடுவார்..
துணிந்து நின்றால் தயங்கிடுவார்..

வீறுநடை போட்டு 
வீரமதை தனதாக்கி 
வெற்றி பல கண்டிட்ட 
பண்பாட்டிலுயர்ந்த தமிழினமே ...

மனம் கலங்காமலே வாழ்ந்திடு ..
உன் பலத்தை எதிரிக்கும் காட்டிடு ....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.