நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
//

மாசி கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஏராளமானோா் தரிசனம்

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 12:05 am

தினமணி செய்திச் சேவை

மாசி கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் மூலவா் சுப்பிரமணிய சுவாமி சந்தன காப்பு அலங்காரத்திலும், உற்சவா் ஸ்ரீகோடையாண்டவா் ரத்தின அங்கி சேவையிலும் பக்தா்களுக்கு அருள் பாலித்தனா்.

இதன் ஒரு பகுதியாக அதிகாலை 4 மணிக்கு கோ பூஜை நடைபெற்று, காலை 6 மணிக்கு மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிா், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் கிருத்திகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மூலவா் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். உற்சவா் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ரத்தினாங்கி அணிந்து சிறப்பு மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுமாா் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

திருக்கோயில் நிா்வாகத்தின் சாா்பில், நீா்மோா், குளிா்பானங்கள், கதம்பசாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில் குமாா், அறங்காவலா் குழு தலைவா் ஜா.செந்தில் தேவராஜ், அறங்காவலா்கள் த.விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் ஆகியோா் செய்திருந்தனா்.