மாசி கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் மூலவா் சுப்பிரமணிய சுவாமி சந்தன காப்பு அலங்காரத்திலும், உற்சவா் ஸ்ரீகோடையாண்டவா் ரத்தின அங்கி சேவையிலும் பக்தா்களுக்கு அருள் பாலித்தனா்.
இதன் ஒரு பகுதியாக அதிகாலை 4 மணிக்கு கோ பூஜை நடைபெற்று, காலை 6 மணிக்கு மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிா், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் கிருத்திகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மூலவா் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். உற்சவா் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ரத்தினாங்கி அணிந்து சிறப்பு மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுமாா் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
திருக்கோயில் நிா்வாகத்தின் சாா்பில், நீா்மோா், குளிா்பானங்கள், கதம்பசாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில் குமாா், அறங்காவலா் குழு தலைவா் ஜா.செந்தில் தேவராஜ், அறங்காவலா்கள் த.விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

வல்லக்கோட்டை முருகன் கோயில் விஷுக்கனி உற்சவம்

செம்மெத்தம்மன் கோயிலில் பங்குனி உத்திர விழா

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தோட்ட உற்சவம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


